திருக்கோயில் வரலாறு
உயிர்களைக் காப்பதற்காக இறைவன் பல்வேறு நாம, ரூபம் கொண்டு அருள் விளையாடல் புரிகிறான். தருமம், பக்தி, சத்யம், ஞானம் தழைக்கும் பூமி பாரதபூமி, இதன் தென் பகுதியில் உள்ள தொண்டைவள நாட்டில் பல மகிமை மிகுந்த திருத்தலங்கள் உள்ளன. தொண்டை நாட்டில் வான்மீகி வனம் என்று புராணங்கள் புகழும் திருவான்மியூர் உள்ளது. மேற்கே மூன்று காதம் வரை உள்ளது. வான்மீகி வனத்தில்தான் இன்றைய கீழ்கட்டளை திருநீலகண்டேசுவரர் ஆலயம் இருக்கிறது. திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் ஏற்பட்ட ஆலகால விடத்தை உண்டவர் சிவபெருமான். அதனால் நீலகண்டர் ஆனார். வான் மீகி, பிருங்கி அகத்தியர் மூவரும் நீலகண்டேஸ்வரரைப் போற்றி வழிபட்டதாகக் கூறுகின்றனர். வான்மீகி தவம் புரிந்த திருவான்மியூருக்கும், அகத்தியர் ஞான ஒளி பெற்ற திரிசூலநாதேஸ்வர மலைக்கும் இடையில் உள்ளது நாகவேம்பு வனமாகும்.
திருக்கோயில் வழிபாடு
தினசரி வழிபாடு
வார வழிபாடு
மாதத்தில் இருமுறை வழிபாடு
ஆண்டுதோறும் வழிபாடு
அமாவாசை மற்றும் பௌர்ணமி நன்நாளில் அருள்மிகு நீலநிற உமையம்மைக்கு சிறப்பு வழிபாடு
மகா சிவராத்திரி பெருவிழா
கார்த்திகை நட்சத்திர நாள்